கோயமுத்தூர் மேற்கு மண்டலம் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் இன்று கோயமுத்தூர் ஸ்மார்ட் சிட்டி மாதிரிச் சாலை தொடர்பான ஸ்மார்ட் ஸ்ட்ரீட் கண்காட்சியை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட்டின் தலைவர் மற்றும் நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ் துவக்கி வைத்து பார்வையிட்டார்.

உடன் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மேலாண்மை இயக்குநரும், மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலருமான விஜயகார்த்திகேயன், மதுரை மாநகராட்சி ஆணையர் சந்தீப் நந்தூரி, மத்திய நகர்புற மேம்பட்டு அமைச்சக ஒருங்கிணைந்த நிதி கோட்ட இயக்குநர் மஜூம்தார், துணை ஆணையாளர் காந்திமதி, மாநகரப் பொறியாளர் (பொ) நடராஜன், இன்ஸ்டிட்யூட் பார் டிரான்ஸ்போர்டேஷன் அண்ட் டெவலப்மென்ட் பாலிசி இயக்குநர் ஸ்ரேயா ஜடேப்பல்லி, ராக் குழுமத்தின் தலைவர் சி.ஆர் சுவாமிநாதன் ஐடிடிபி உறுப்பினர்கள் சாரா நடாஸா, அஷ்வதி திலீப், பாரதி, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பார்வையாளர்கள் உள்ளனர்.





